Saturday 20 October 2012

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க...!

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க

எத்தனையோ கெமிக்கல் கலந்த

அழகுப்பொருட்கள் கடை களில் இருந்தாலும்,

அவை அனைவருக்குமே சிறந்ததாக

செயல்படும் என்று சொல்ல முடியாது.ஏனெனில்

அனைவருக்குமே ஒரே மாதிரி யான சருமம்

இருக்கும் என்று சொல்ல முடியாது. மேலும்

அக் கெமிக்கல் கலந்த பொருட்களை

பயன்படுத்தினால், சில சமயங்களில்

சருமத்திற்கு அவை உடலுக்கு சேராமல் பல பக்கவிளை

வுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே அத்தகைய

பிரச்சனைகள் எல்லாம் வராமல்

இருக்கவேண்டுமென்றால், அதற்கு இயற்கை

முறைதான் சிறந்தது.

இப்போது அக்கரும்புள்ளிகளை போக்க வீட்டில்

இருக்கும் எந்த பொருட்களை

பயன்படுத்தினால் போகும் என்பதைப்

பார்ப்போமா !

கரும்புள்ளியை நீக்க சில டிப்ஸ்…

*உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில்

15 நிமிடம் தேய்க்கவேண்டும். பின் முகத்தை

காயவைத்து, குளிர்ந்த நீரில்

கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள்

எளிதில் நீங்கிவிடும்.

* வெந்தயக் கீரையை நன்கு அரைத்து

பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை

முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து,

பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து

செய்து வந்தால், விரைவில் முகத்தில்

இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

*கொத்தமல்லி & மஞ்சள் தூள் ஒரு சிறந்த

மருந்து. இதனை அரைத்து பேஸ்ட்செய்து

முகத்தில் தடவி காயவைத்து கழுவ

வேண்டும்.

* எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து

கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ்

செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்

கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில்

இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம்

பளிச்சென்று காணப் படும்.

* கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு

மருந்து என்னவென்றால் ஓட்ஸை

பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து

முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து,

பின்னர் கழுவ வேண்டும்.

* இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள்

ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி

வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய்விடும்.

* தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து,

கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20

நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ

வேண்டும். இந்த முறையை தினமும் செய்து

வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

*பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து,

அதனை முகத்தில் தடவி, 25நிமிடம்

ஊறவைத்து, பின் வெது வெதுப்பான நீரில்

கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

எனவே மேற்கூறிய டிப்ஸ்களை யெல்லாம்

வீட்டில் செய்துவந்தால், முகத்தில் இருக்கும்

கரும்புள்ளி கள் நீக்கி, அழகான சுத்தமான

சருமத்தை பெறலாம்.

No comments:

Post a Comment